Last Updated : 23 Jan, 2017 10:53 AM

 

Published : 23 Jan 2017 10:53 AM
Last Updated : 23 Jan 2017 10:53 AM

மக்கள் விரும்பும் நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு - அலங்காநல்லூரில் தொடரும் போராட்டம்

நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை மக்கள் தொடர்வதால், அலங்காநல்லூரில் அரசு ஏற்பாட்டின்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியவில்லை. இதையடுத்து, அங்கு மக்கள் விரும்பும் நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தடை காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் பொங்கலுக்கு ஜல்லிக் கட்டு நடைபெறவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அலங்காநல் லூர் கிராம மக்கள், ‘வாடிவாசலை திறக்கும்வரை வீட்டுவாசலை மிதிக்க மாட்டோம்’ என்ற முழக்கத் துடன் கடந்த 16-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் களுக்கு ஆதரவாக தமிழகம் முழு வதும் போராட்டம் வலுத்தது. சென்னை மெரினா முதல் கன்னியா குமரி வரை இளைஞர்கள், மாணவர் கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தமிழக அரசு நேற்று முன்தினம் அவசரச் சட்டம் பிறப்பித்தது. அலங்காநல்லூரில் நேற்று அவசர அவசரமாக ஜல்லிக் கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. ஆனால், போராட்டத் தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களும் பொதுமக்களும் அவசரச் சட்டத்தை ஏற்க மறுத்துவிட்டனர். நிரந்தரச் சட்டம் மட்டுமே தேவை என வலியுறுத்தி கொட்டும் மழையிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை நானே தொடங்கி வைக்கிறேன் என்று கூறிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தார். அலங்காநல்லூரில் நேற்று காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. 2,500 போலீஸார் பாதுகாப்புடன் அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கினார்.

ஆனால், அதிகாரிகளை உள்ளே வரவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விரட்டியடித்தனர்.

சாலைகளில் தடுப்பு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலங்காநல்லூர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரமடைந்தது. ஊரைச் சுற்றி நான்கு திசைகளிலும் மாட்டு வண்டி கள், உழவுக் கலப்பை, மரக்கட்டை கள், மின் கம்பங்கள், கருவேல மரங்கள், காய்ந்த தென்னை மரங் களை வெட்டிப்போட்டு தடைகளை ஏற்படுத்தினர். அதனால், திட்டமிட்ட படி ஓ.பன்னீர்செல்வம் அலங்காநல் லூர் செல்ல முடியவில்லை. இதை யடுத்து ஆட்சியர் வீரராகவ ராவ், எஸ்.பி. விஜயேந்திர பிதாரி மற்றும் தலைமைச் செயலக அதிகாரி களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

கடைசி முயற்சியாக பேச்சு வார்த்தை நடத்த சென்ற ஆட்சியரை அலங்காநல்லூருக்கு 5 கி.மீ.க்கு முன்பே போராட்டக்காரர்கள் தடுத்து திருப்பி அனுப்பினர். கடைசிகட்ட சமாதான முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவை கைவிட்டார்.

மாற்று ஏற்பாடுகள்

இதற்கு மாற்று ஏற்பாடாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் தொடங்கி வைக்கலாமா என ஆலோசிக்கப் பட்டது. அங்கும் எதிர்ப்பு கிளம்பவே ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்கும் முடிவை கைவிட்டு முதல்வர் சென்னை புறப்பட்டார்.

முன்னதாக மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. அதனால், இன்று தமிழகத்தில் சில பகுதிகளில் வாடிவாசல்கள் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அலங்காநல்லூரை பொறுத்தவரை அந்த ஊர் மக்கள் விரும்பும் நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இருந்த தடை தற்போது முழுமையாக நீக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசால் கொண்டுவரப் பட்டுள்ள இந்த அவசரச் சட்டம் நிலையான, நீடித்த, உறுதியான சட்டம். இந்தச் சட்டத்தின் முன்வடிவு, வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கொண்டுவந்து நிறைவேற்றப்படும்.

டெல்லியில் தொலைக்காட்சி நண்பர்கள் சிலர், ‘நீங்களே அலங் காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பீர்களா’ எனக் கேட் டனர். நானும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கிவைப்பேன் என்றேன். அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்க வந்தேன். அது நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த மாதிரியான தடைகளை ஏற்படுத்த யார் முன்வந்தாலும் அதை தமிழக அரசு முறியடிக்கும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

சொன்னபடி அலங்காநல்லூரில் காளைகளை திறந்துவிட முடியாமல் போனதால் ஓ.பன்னீர்செல்வம் சோகத்துடன் காணப்பட்டார்.

போராட்டம் தொடர்வது ஏன்?

மதுரையில் இருந்து சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ஒரு சட்டத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்று வதற்கு முன்பு சட்டமாக்க வேண் டும் என்றால், அவசரச் சட்டம் பிறப் பிக்கப்பட வேண்டும். அந்த அவசரச் சட்டத்தின் முன்வடிவு, சட்டப் பேரவை கூட்டத் தொடரில் 6 மாதத் தில் கொண்டுவந்து நிறைவேற்றப் பட வேண்டும். அதைத்தான் தமிழக அரசு செய்துள்ளது. அவசரச் சட் டம் பிறப்பித்திருப்பதே நிலையான நீடித்த சட்டமாகும்’’ என்றார்.

‘‘பலமுறை விளக்கங்கள் கொடுத்த பின்பும், மாணவர்கள் அதை ஏற்க மறுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார் களே’’ என்று கேட்டபோது, ‘‘அந்த காரண காரியங்கள் உங்களுக்கு நன்றாகவே தெரியும்’’ என முதல்வர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x