Published : 22 Jul 2016 06:57 AM
Last Updated : 22 Jul 2016 06:57 AM

உயர்கல்வித் துறைக்கு ரூ.3,679 கோடி: அண்ணாமலை பல்கலை.க்கு ரூ.153 கோடி

பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.3,679 கோடியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கு ரூ.153 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 2016-17-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் அறிக்கை:

தமிழகத்தை நாட்டின் அறிவுசார் தலைநகராகவும், புதிய கண்டு பிடிப்புகளுக்கான மையமாகவும் மாற்ற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிற து. உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்த வும், குறிப்பாக பெண்கள் எளிதாக உயர்கல்வி பெறவும் தேவையான பகுதிகளில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்.

அரசு மேற்கொண்ட பல்வேறு சிறப்பு முயற்சிகள் காரணமாக உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 44.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கல்வியில் பின்தங்கிய குடும்பங் களில் இருந்து உயர்கல்வி பயில வரும் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்க முதல் தலைமுறை பட்ட தாரி மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட் டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.582 கோடியே 58 லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது.

அண்ணா மலை பல்கலைக்க ழகத் துக்கு ரூ.152 கோடியே 97 லட்சம் உட்பட அனைத்து பல் கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக ரூ.357 கோடியே 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட் டிருக்கிறது. உயர்கல்வித் துறைக் கென மொத்தமாக ரூ.3,679 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x