Published : 05 Nov 2014 12:25 PM
Last Updated : 05 Nov 2014 12:25 PM
திருட்டு விசிடி பிரச்சினையை ஒழிப்பது குறித்து தமிழ்த் திரையுலக கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் 16- ம் தேதி நடக்கிறது.
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப் பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு, தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய அமைப்புகள் இணைந்து நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகுக்கு சவாலாக இருந்துவரும் திருட்டு விசிடியை ஒழிப்பது தொடர்பாக 16-ம் தேதி மதியம் 1 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் திருட்டு விசிடியை ஒழிப்பது குறித்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
அதனால் இம்மாதம் 16-ம் தேதி சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மதியம் 1 மணி முதல் படப்பிடிப்புகள் மற்றும் படப்பிடிப்பு சம்பந்தமான அனைத்து பணிகளும் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT