Published : 30 Nov 2014 06:45 PM
Last Updated : 30 Nov 2014 06:45 PM

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் அதே நிலையில் நீடித்து வருகிறது.

சனிக்கிழமை தென்மேற்கு வங்கக் கடலில் வட தமிழக பகுதியில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உள்ளது.

இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஆங்காங்கே கன இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x