Published : 10 Jul 2016 01:17 PM
Last Updated : 10 Jul 2016 01:17 PM

தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் அரியவகை டால்பின்கள்

தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் ஒரே வாரத்தில் இரண்டு டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் நாட்டுப்படகு மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில் டால்பின், கடல் பசு, திமிங்கலம் உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகமாக வசிக்கின்றன. இவை கடலில் ஏற்படும் இயற்கை சீதோஷ்ண மாற்றங்கள், விபத்து கள், மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழப்பு ஆகியவற்றால் கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 3, 9 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு டால்பின்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி யுள்ளன.

இது குறித்து நமது செய்தியாள ரிடம் தனுஷ்கோடி நாட்டுப்படகு மீனவர்கள் கூறியதாவது:

அழிந்து வரும் அரிய வகை உயிரினமாக டால்பின் உள்ளதால் மத்திய அரசு 2009-ம் ஆண்டு அக் டோபர் மாதம் இந்தியாவின் தேசிய கடல் நீர் விலங்காக டால்பின்களை அறிவித்தது. மன்னார் வளைகுடா, பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில் டால்பின் மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

பாரம்பரிய மீன்பிடி முறையை மறந்து நாம் ஆழ்கடல் மீன்பிடி முறைகளுக்கு மாறி விட்டோம். இதனால் ஆழ்கடலில் வாழும் டால்பின்கள் கரையை நோக்கி வரத் தொடங்கி விட்டன. எனவே விசைப்படகுகள், பாறைகள், வலைகள் ஆகியவற்றில் அடிபட்டு டால்பின்கள் இறந்து விடுகின்றன.

கடலோரப் பகுதி மக்களிடம் அரிய வகை உயிரினமான டால்பின் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் சுற்றுச்சூழல் கல்வியில் அரிய வகை உயிரினங்களைப் பற்றி போதிக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x