Published : 07 Dec 2013 05:13 PM
Last Updated : 07 Dec 2013 05:13 PM

13 நாட்களில் 98 இலங்கை மீனவர்கள் சிறைபிடிப்பு

கடந்த 13 நாட்களில் மட்டும் இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி கடல் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 98 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதாக, மத்திய பாதுகாப்புத் துறை புள்ளி விபர அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இன்று மட்டும், சென்னை கடற்கரையில் இருந்து 118 நாட்டிக்கல் மைல் தொலைவிலும், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா பட்டினத்தில் இருந்து 116 நாட்டிக்கக் மைல் தொலைவிலும் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 16 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கடந்த 13 நாட்களில் மொத்தம் 98 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள் தமிழ்நாடு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x