Published : 28 Jan 2017 04:26 PM
Last Updated : 28 Jan 2017 04:26 PM

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு 3-வது பரிசு

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு 3-வது பரிசு கிடைத்துள்ளது.

இதற்கான பரிசு, சான்றிதழை ராணுவத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாமரே சனிக்கிழமை வழங்கினார். கடந்த 26-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் கலந்து கொண்டன.

அதில் தமிழகம், மகராஷ்டிரம் மாநிலங்களின் அலங்கார ஊர்திக்கு 3-வது பரிசு கிடைத்துள்ளது. அருணாச்சலப்பிரதேசத்துக்கு முதல் பரிசும், திரிபுராவுக்கு 2-வது பரிசும் கிடைத்துள்ளது.

3-வது பரிசு பெற்ற தமிழக அரசின் அலங்கார ஊர்தி தமிழகத்தின் தலைசிறந்த நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான கரகாட்டத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட அம்மன் சிலை முன்பு 12 பெண், 6 ஆண் நடனக் கலைஞர்கள் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்ததாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x