Published : 24 Sep 2016 11:16 AM
Last Updated : 24 Sep 2016 11:16 AM

பள்ளிக்கரணையில் வழிப்பறி: சகோதரர்கள் 3 பேர் கைது

சென்னை பள்ளிக்கரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட சகோதரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பள்ளிக்கரணை எம்.ஜி.ஆர்.நகர், நேரு தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ் (26). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பள்ளிக்கரணை கைவேலி சந்திப்பு அருகே வழிமறித்த 3 நபர்கள் அவரை தாக்கி ஒன்றரை பவுன் செயின் மற்றும் பைக்கை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக கனகராஜ் கொடுத்த புகாரின்படி பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பள்ளிக்கரணை, வெள்ளக்கல் மேடவாக்கம் பிரதான சாலை பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த மயிலாப்பூரைச் சேர்ந்த பிரவீன் (24) மற்றும் அவரது தம்பிகள் வசந்த் (22), விஜய் (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செயின் மற்றும் பைக்கை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x