Published : 17 Nov 2014 08:51 AM
Last Updated : 17 Nov 2014 08:51 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: 4,963 காலிப் பணியிடங்களுக்கு 13.38 லட்சம் பேர் போட்டி

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில், 4,963 காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்து 38 ஆயிரத்து 254 தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பி எஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார்.

சிலர் ஒன்றுக்கு இரண்டு முறை விண்ணப்பிக்கும் வாய்ப்பு இருப்பதால் இந்த எண்ணிக்கை சற்று குறையக் கூடும் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித் திருந்தனர்.

டிசம்பர் 21-ம் தேதி தேர்வு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலியிடங்களை நிரப்புவதற் காக டிசம்பர் 21-ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கி கடந்த 12-ம் தேதி நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது. குரூப்-4 தேர்வு எழுத குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற காரணத்தினாலும், நேர்முகத் தேர்வு இல்லாததால் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு வேலை உறுதி என்பதாலும் எப்போதுமே இத்தேர்வுக்கு கடுமையான போட்டியிருக்கும்.

எஸ்எஸ்எல்சி முடித்தவர்க ளைக் காட்டிலும், பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, பிஇ, பிஎல் உள்ளிட்ட தொழில்கல்வி படித்தவர் களும் குரூப்-4 தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப் பிப்பது வழக்கம். கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வில் முதலிடத் தைப் பிடித்தவர் ஒரு பொறியி யல் பட்டதாரி என்பது குறிப்பிடத் தக்கது.

மொத்தம் 13 லட்சத்து 38 ஆயிரத்து 254 மாணவர்கள் போட்டி போடுகிறார் கள். தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் தேர்வர் கள் முழு மூச்சுடன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மாணவ-மாணவிகள் அதற்கான தயாரிப்பில் முழு முயற்சியுடன் ஈடுபட்டுள்ளனர். தனியார் பயிற்சி மையங்களில் குரூப்-4 தேர்வுக்கான வகுப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தேர்வுக்கு இன்னும் 5 வாரங்களே இருப்பதால் சில மையங்களில் அதிவிரைவு பயிற்சி கள் நடந்துகொண்டிருக்கின்றன. வகுப்புகள், மாதிரி தேர்வுகள், நண்பர்களுடன் குழு விவாதம் என தேர்வர்கள் முழு மூச்சுடன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். தற்போதைய போட்டிநிலை, அரசு பணித் தேர்வுகள் குறித்து அதிகரித்திருக்கும் விழிப்புணர்வு, பயிற்சி மையங்கள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கட் ஆப் மார்க் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x