Published : 29 Jan 2017 09:23 AM
Last Updated : 29 Jan 2017 09:23 AM

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: கவுதமன் கைது

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய திரைப்பட இயக்குநர் கவுதமன் கைது செய்யப் பட்டார்.

சென்னை, மெரினா கடற்கரை யில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக போராடியப் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

நுங்கம்பக்கம், வள்ளுவர்கோட் டம் அருகே, இந்தத் தடியடி யைக் கண்டித்து, கைதுசெய் யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் மாணவர் அமைப்பினருடன் சேர்ந்து இயக்குநர் கவுதமன் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தார். இதற்கு போலீஸ் அனுமதியும் வாங்கியிருந்தார். ஆர்ப்பாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை நேற்று முன்தினம் இரவு போலீஸார் திடீரென ரத்து செய்தனர்.

ஆனால், போலீஸ் தடையை மீறி இயக்குநர் கவுதமன் தலைமையில் வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்களும், விவசாயப் பிரதி நிதிகளும் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக கவுதமன் உட்பட சுமார் 30 பேரை போலீஸார் கைது செய்தனர். 2 மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x