Published : 04 Feb 2014 12:00 AM
Last Updated : 04 Feb 2014 12:00 AM

அடுத்தகட்டமாக இலங்கையில் மீனவர் பேச்சுவார்த்தை

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை கூறியதாவது:

தமிழக - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை சென்னையில் கடந்த 27-ம் தேதி நடந்தது. தமிழகம் உள்பட பல மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி, சுருக்கு மடி மூலம் மீன்பிடிப்பதை முழுவதுமாக தடை செய்வது, மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க இதில் தீர்மானிக்கப்பட்டது.

பிப்ரவரி 10 முதல் 30 நாட்களுக்கு இழுவை படகுகள், இலங்கை மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதை நிறுத்திவைக்க இலங்கை மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.

இதை தமிழக மீனவர்கள் ஏற்றுக்கொண்டனர். மேற்குறிப்பிட்ட ஒரு மாதகால தடை நடைமுறைக்கு வரும் வரை, இலங்கை கரையோர பகுதிகளில் இழுவலை படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடக் கூடாது என்று இருநாட்டு மீனவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவப் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்ததை ஏற்று, அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை இலங்கையில் நடத்தி சுமுக முடிவுகள் எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x