Published : 13 Jul 2016 08:11 AM
Last Updated : 13 Jul 2016 08:11 AM

ப.சிதம்பரத்துக்கு தொல்லை தரவே அவர் மகனுக்கு சம்மன்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஏர்செல் - மேக்சிஸ் பண பரிவர்த்தனையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருக்கிறது என நாடாளுமன்றம் கூடும் நேரங்களில் எல்லாம் சம்மன் அனுப்புவதை அமலாக்கத் துறை வழக்கமாகக் கொண்டுள்ளது.

பாஜகவை நாடாளுமன்றத் துக்கு உள்ளும், வெளியிலும் மிகக் கடுமையாக விமர்சிக்கக் கூடியவர் ப.சிதம்பரம் என்பதால் அவரது குடும்பத்தை ஆளுங்கட்சி குறி வைக்கிறது. இஷ்ரத் ஜஹான் வழக்கில் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் ப.சிதம்பரத்தின் வாதத் திறமையைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். எனவே, அவருக்கு ஏதாவது தொல்லை தர முடியுமா, அவரது கவனத்தை திசை திருப்ப முடியுமா என பாஜக திட்டமிடுகிறது.

இந்த சம்மனை அனுப் பியுள்ள அமலாக்கத்துறை அதிகாரி ராஜ் குமார் சிங் பல்வேறு குற்றச்சாட்டு களுக்கு ஆளானவர். ப..சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது உதவி கேட்டு வந்தவர். தவறான நபர்களுக்கு உதவுவது தவறானது என்ற கொள்கை உடையவர் ப.சிதம்பரம். எனவே காழ்ப்புணர்ச்சி காரணமாக சிதம்பரத்தின் அரசியல் பெருமை களை குலைக்கும் முயற்சியாக கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x