Published : 17 Jun 2016 07:34 AM
Last Updated : 17 Jun 2016 07:34 AM

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

மக்களும் மருத்துவ வசதிகளை எளிதாகப் பெறுவதை உறுதி செய்வதற்காக மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்காக தேவையான இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்தல், தரம் உயர்த்துதல், வட்ட மற்றும் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளை தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இந்த அரசின் லட்சியத் திட்டமான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளில் ஏழை, எளிய மக்கள் தரமான மருத்துவ சிகிச்சை வசதிகளை பெற்று வருகின்றனர். மக்கள் நலன் காக்க இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இவ்வாறு ஆளுநர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x