Published : 07 Sep 2016 08:37 AM
Last Updated : 07 Sep 2016 08:37 AM
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல் பட்டதாக விருகம்பாக்கம் பகுதி ஜெய லலிதா பேரவை தலைவர் கே.விஜயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அதிமுகவின் கொள்கை குறிக் கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும், தென்சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த விருகம்பாக்கம் பகுதி ஜெயலலிதா பேரவை தலைவர் கே.விஜயன், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT