Published : 08 Feb 2017 08:03 AM
Last Updated : 08 Feb 2017 08:03 AM
வார்தா புயல் பாதிப்பால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 10-ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் வீசிய வார்தா புயலில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. விலங்குகள், பறவை களின் அடைப்பிடங்கள் உள்ளிட் டவையும் பெரிதும் சேதமடைந் தன. இதையடுத்து, சீரமைப்பு பணிகளுக்காக வண்டலூர் பூங்கா கலவரையின்றி மூடப் பட்டது. பின்னர், சீரமைப்பு பணி கள் முழுவீச்சில் மேற்கொள்ளப் பட்டன. விலங்குகள், பறவைகள் அதன் அடைப்பிடங்களில் அடைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புயலின்போது சேதமடைந்திருந்த பார்வையாளர் களுக்கான அடிப்படை கட் டமைப்பு வசதிகளும் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளன. உரிய அடைப்பிடங்களில் விலங்கு களை, பார்வையாளர்கள் காண் பதற்கான சூழலும் உருவாக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வரும் 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டு, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று பூங்கா நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT