Published : 31 Jul 2016 09:51 AM
Last Updated : 31 Jul 2016 09:51 AM

ராம்குமாருக்கு ரத்தப் பரிசோதனை

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்கு மார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 4 ரத்த மாதி ரிகள் எடுக்கப்பட்டன. அவற்றின் சோதனை முடிவுகள் வந்துள் ளன. அதில் ராம்குமாரின் ரத்தமும் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, புழல் சிறையில் இருந்து ராம்குமார் நேற்று காலை பலத்த போலீஸ் பாது காப்புடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவரிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டது. அவரது கழுத்தில் பிளேடால் கிழிக்கப்பட்ட வெட்டுக் காயத்துக் கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ராம்குமாரை வரும் 8-ம் தேதி மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத் திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x