Published : 20 Nov 2014 11:50 AM
Last Updated : 20 Nov 2014 11:50 AM
வைகை பழைய பாசனப் பகுதிகள் 3 மற்றும் 2-க்கு வைகை அணையிலிருந்து நாளை (21-ம் தேதி) முதல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம், வைகை அணையிலிருந்து, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகள் 3 மற்றும் 2-க்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகள் 3 மற்றும் 2-க்கு வைகை அணையிலிருந்து 21.11.2014 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது.
இதனால், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 1,09,620 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT