Published : 22 Apr 2017 07:58 AM
Last Updated : 22 Apr 2017 07:58 AM

பல்லாவரத்தில் மின்சார ரயில் மோதி 2 இளைஞர்கள் பலி

பல்லாவரம் தர்கா சாலை பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்(21). மலையடி பல்லா வரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார்(20). நண்பர்களான இரு வரும், எழும்பூரில் பணி செய்து வந்தனர்.

இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பல்லாவரம் அருகே தண்ட வாளத்தை கடக்கும்போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் மோதியது. சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த முகேஷ், குரோம் பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

2 மாணவர்கள் மூழ்கி பலி

பல்லாவரம் பொழிச்சலூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த முரளியின் மகன் ஆனந்த்(13), பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த காத்தவராயன் மகன் வசந்த்(13) ஆகிய இருவரும் 8-ம் வகுப்பு மாணவர்கள்.

நேற்று பள்ளியின் கடைசி நாள் என்பதால் இவர்கள் உள்ளிட்ட 10 மாணவர்கள் பல்லாவரம் அருகே உள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்கச் சென்றனர். ஆனந்த், வசந்த் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். 2 பேரின் உடல்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x