Published : 27 Sep 2016 09:59 AM
Last Updated : 27 Sep 2016 09:59 AM
வங்கி அதிகாரி, எழுத்தர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம், எம்பவர் அறக்கட்டளை, பெரியார் ஐஏஎஸ் அகாடமி சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான பயிற்சி வகுப்புகள் சென்னையிலும், திருச்சியிலும் 3 நாட்கள் நடைபெறும். சென்னையில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அக்டோபர் 7 முதல் 9-ம் தேதி வரையும், திருச்சியில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் அக்டோபர் 13 முதல் 15 வரையும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும்.
இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் ஓபிசி வகுப்பினர் வங்கி தேர்வு விண்ணப்பத்தின் நகலை aiobc.coaching@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அல்லது “பொதுச் செயலாளர், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச்சங்கம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, 139, பிராட்வே, சென்னை 600 108” என்ற முகவரிக்கு அக்டோபர் 3-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99406-69385, 94451-72814 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இந்த தகவலை யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச்சங்கப் பொதுச் செயலாளர் ஞா.மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT