Published : 01 Jun 2017 02:49 PM
Last Updated : 01 Jun 2017 02:49 PM

கொளத்தூரில் ஸ்டாலினின் வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம்

கொளத்தூர் தொகுதியில் அதிகாரத்தை பயன்படுத்தி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில் ஸ்டாலினின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2011 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் 66, 677 வாக்குகளும் சைதை துரைசாமிக்கு 65, 943 வாக்குகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றிபெற்றதாக சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x