Published : 28 Oct 2015 10:12 AM
Last Updated : 28 Oct 2015 10:12 AM

பிஎஸ்என்எல் பெயரில் மோசடி: ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை

மேம்பட்ட இணைய வசதி செய்து தருவதாக பிஎஸ்என்எல் பெயரில் சிலர் பணம் பிடுங்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாகவும் வாடிக்கையாளர்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம் என்று பிஎஸ்என்எல் சென்னை தொலைத் தொடர்பு வட்டத்தின் பொது மேலாளர் கலாவதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்களை தொடர்புகொள்ளும் சிலர் “பிஎஸ்என்எல் இணைய சேவை மாற்றி அமைக்கப்படவுள்ளது. ஃபைபர் தொழில்நுட்பத்தின்படி மேம்பட்ட இணைய வசதி வழங்கப்படும். இதற்காக பிஎஸ்என்எல் வழங்கிய பழைய மோடம் கருவியை திருப்பிக் கொடுத்தால், புதிய மோடம் வழங்கப்படும். இதற்கு ரூ.2 ஆயிரத்து 500 கட்டணம் ஆகும்” என்று கேட்பதாக புகார்கள் வந்துள்ளன.

இது சம்பந்தமாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் சிலர் எங்களிடம் விளக்கம் கேட்ட னர். பிஎஸ்என்எல் எதற்காகவும் புதிதாக பணம் வசூலிக்க வில்லை. அப்படி யாராவது வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். வாடிக்கையாளர்கள் யாரும் வெளி நபர்கள் கூறுவதை நம்பி பணத்தையோ, இணையத்துக்கான மோடத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x