Published : 04 Aug 2016 07:46 AM
Last Updated : 04 Aug 2016 07:46 AM
குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 9 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றப் பின்னணி நபர்கள், திருட்டு மற்றும் செயின் பறிப்பு குற்றவாளிகள் 9 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டார்.
அதன்படி கோடம் பாக்கத்தைச் சேர்ந்த மேக நாதன்(26), ட்ரஸ்ட்புரத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்(42), மைலாப்பூரைச் சேர்ந்த சிவா(27), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சசிதரன்(24), புதுவண் ணாரப்பேட்டையைச் சேர்ந்த பெர்னார்ட்நாதன்(37), குன்றத் தூரைச் சேர்ந்த வைரம்(38), அம்பத்தூரைச் சேர்ந்த பாபு, புழலைச் சேர்ந்த திலீபன், பெசன்ட் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் நேற்று குண்டர் தடுப்புக் காவலில் ஓராண்டு தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT