Published : 15 Jun 2017 05:16 PM
Last Updated : 15 Jun 2017 05:16 PM

ஸ்டாலின் மாட்டிறைச்சியை விரும்புகிறார்; பாஜக பசும்பாலைக் கொடுக்க விரும்புகிறது: முரளிதரராவ்

ஸ்டாலின் மாட்டிறைச்சியை விரும்புகிறார். மக்களுக்குப் பசும்பாலைக் கொடுக்க பாஜக விரும்புகிறது. தமிழக மக்களுக்கு டாஸ்மாக் மதுவுக்குப் பதிலாக பசும்பால் கொடுப்போம் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.

மதுக்கடைக்கு எதிராகப் போராடும் பெண்களுக்கு ஆதரவாக பாஜக சார்பில் சென்னை கோட்டையை நோக்கி இன்று பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

பேரணியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேசுகையில், ''வருமானத்துக்காக திமுகவும், அதிமுகவும் டாஸ்மாக்கை ஊக்கப்படுத்துகின்றன. இதனால் மக்களின் வருமானம், குடும்பம், ஆரோக்கியம், குழந்தைகளின் படிப்பு ஆகியன பாதிக்கப்படுகின்றன. மதுவால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டையும், தமிழக மக்களின் ஆரோக்கியத்தையும் பாஜக நிச்சயம் பாதுகாக்கும். திமுகவும், அதிமுகவும் டாஸ்மாக்கை விரும்புகிறார்கள். மு.க.ஸ்டாலின் மாட்டிறைச்சியை விரும்புகிறார். மக்களுக்குப் பசும்பாலைக் கொடுக்க பாஜக விரும்புகிறது. தமிழக மக்களுக்கு டாஸ்மாக் மதுவுக்குப் பதிலாக பசும்பால் கொடுப்போம். அதன்மூலம் தமிழக மக்களின் ஆரோக்கியத்தையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் பெருக்குவோம். மதுக்கடைக்கு எதிரான இந்த போராட்டம் தொடக்கம்தான்'' என்றார் முரளிதரராவ்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x