Published : 08 Feb 2017 08:29 AM
Last Updated : 08 Feb 2017 08:29 AM
தமிழக அம்பேத்கர் பெரியார் கலப்புத் திருமண நலச்சங்க செயலர் பொற்கொடி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
கலப்பு திருமணத்தை பதிவு செய்யும்போது, அவர்கள் விரும் பாவிட்டால் ஜாதி, மதத்தை கேட் காமல் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வு நேற்று விசாரித்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும் போது, ‘பதிவுத் துறை சட்டப்படி மதம், ஜாதியைக் குறிப்பிட விரும்பாதவர்களுக்கு தனி படிவம் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மனுதாரரின் கோரிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை என கூறி அம்மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT