Published : 28 Oct 2015 10:00 AM
Last Updated : 28 Oct 2015 10:00 AM
பராமரிப்பு பணி காரணமாக வைகை, குருவாயூர் உள்ளிட்ட சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
விருத்தாச்சலம்-திருவெண்ணைநல்லூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்களை மாற்றுப் பாதையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, லோகமான்யா திலக் சந்திப்பு-மதுரை வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண்.11043/44), மங்களூர்-புதுச்சேரி விரைவு ரயில் (16856) ஆகியவை
வரும் 31-ம் தேதி விழுப்புரம், கடலூர் துறைமுக சந்திப்பு, விருத்தாச்சலம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
இதேபோல், சென்னை எழும்பூர்-குருவாயூர் விரைவு ரயில் (16127) நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி வழியாக இயக்கப்படும்.
இதே ரயில் நவம்பர் 2-ம் தேதி மட்டும் விழுப்புரம், கடலூர் துறைமுக சந்திப்பு, விருத்தாச்சலம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். மேலும், மதுரை-சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) நவம்பர் 2-ம் தேதி விருத்தாச்சலம், விழுப்புரம் மார்க்கத்தில் இயக்கப்படும்.
இதே ரயில் நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் மார்க்கத்தில் இயக்கப்படும். நாகர்கோயில்-மும்பை விரைவு ரயில் (16352) நவம்பர் 5-ம் தேதி திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் மார்க்கத்தில் இயக்கப்படும்.
ரயில்கள் ரத்து
மதுரை-விழுப்புரம் பயணிகள் ரயில் (56706/05) வரும் 31-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை திருச்சி-விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், சேலம்-விருத்தாச்சலம் பயணிகள் ரயில் (76849/48) வரும் 31-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை சின்ன சேலம்-விருத்தாச்சலம் இடையேயும், காரைக்கால்-பெங்களூர் பயணிகள் ரயில் (56513) நவம்பர் 2 முதல் 6-ம் தேதி வரை காரைக்கால்-சேலம் இடையேயும், பெங்களூர்-காரைக்கால் (56514) பயணிகள் ரயில் நவம்பர் 1 முதல் 5-ம் தேதி வரை சேலம்-காரைக்கால் இடையேயும் ரத்து செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT