Published : 20 Jun 2017 01:13 PM
Last Updated : 20 Jun 2017 01:13 PM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது இன்று (செவ்வாய்க்கிழமை) கூறும்போது, "தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டிவனம், வந்தவாசி, உத்திரமேரூர் ஆகிய இடங்களில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமுட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT