Published : 26 Nov 2014 02:40 PM
Last Updated : 26 Nov 2014 02:40 PM
சிபிஐ இயக்குநர் நியமன நடை முறையில் மாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா, காங் கிரஸ் கட்சியின் பலத்த எதிர்ப் புக்கிடையே மக்களவையில் நேற்று நிறைவேறியது.
டெல்லி சிறப்பு போலீஸ் படை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இந்த மசோதாவை, மத்திய பணி யாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “சிபிஐ இயக்குநர் நியமன நடைமுறையை எளிதாக்குவதே அரசின் நோக்கம். வேறு தவறான நோக்கம் ஏதுமில்லை” என்றார்.
சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் 3 உறுப்பினர் குழுவில் தற்போது பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற் றுள்ளனர். இந்நிலையில் மக்கள வையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் இல்லாதபட்சத்தில் அவருக்கு பதிலாக எதிர்க்கட்சியின் தலைவரை உறுப்பினராக சேர்க்க இந்தத் திருத்தம் வகை செய்கிறது.
மேலும் தேர்வுக்குழு உறுப்பினர் பதவியில் காலியிடம் இருந்தாலோ அல்லது ஓர் உறுப்பினர் வராமல் போனாலோ மற்ற இருவரும் சேர்ந்து சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய சட்டத்திருத்தம் வழிசெய்கிறது.
இந்த மசோதா குரல் வாக் கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது. மேலும் பிஜு ஜனதா தளம் உறுப்பினர் தத்தாகத் சத்பதி கொண்டு வந்த திருத்தமும் நிராகரிக்கப் பட்டது.
“இம்மசோதாவை திரும்பப் பெறவேண்டும். விரிவான திருத் தங்களுடன் பின்னர் தாக்கல் செய்யலாம்” என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்தார். இதற்கு பிஜு ஜனதா தளம் கட்சி யின் இரு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சியை அவமானப் படுத்தும் தீய நோக்கத்துடன் இத்திருத்தங்களை அரசு செய்வ தாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT