Published : 25 Apr 2017 03:02 PM
Last Updated : 25 Apr 2017 03:02 PM
பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக முதல் நாள் போராட்டத்தை நடத்திய அவர்கள் நாளை முதல் பல்வேறு வகையிலான இயக்கங்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்த்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , வேலை நிறுத்தம் தொடர்பாக அரசுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பியும் அரசு அது குறித்து எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை, இந்த சூழ்நிலையில் இன்று முதல் தொடங்கியிருக்கும் போராட்டம் மற்றும் கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தை நடத்த அரசு முன் வரவில்லையென்றால் . திட்டமிட்டப்படி போராட்டங்கள் நடைபெறும் அடுத்த அடுத்த கட்டங்களில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT