Published : 04 Jan 2017 10:23 AM
Last Updated : 04 Jan 2017 10:23 AM

கோவை: காட்டு யானை தாக்கி தம்பதி உயிரிழப்பு

கோவை வனக் கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் உள்ள வெள்ளப்பதி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி(68). இவரது மனைவி பகவதி(58). நேற்று மதியம் சுமார் 2 மணியளவில், கணவன் - மனைவி இருவரும் வனத்தை ஒட்டிய பகுதியில், விறகு சேகரிக்கச் சென்றனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காட்டு யானை ஒன்று, இவர்கள் இருவரையும் தாக்கியது. தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே வெள்ளிங்கிரி உயிரிழந்தார். படுகாயமடைந்த பகவதி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். இறந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x