Last Updated : 12 Jan, 2017 04:35 PM

 

Published : 12 Jan 2017 04:35 PM
Last Updated : 12 Jan 2017 04:35 PM

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சென்னையில் நூதன போராட்டம்

ஜல்லிக்கட்டை உடனே நடத்தக் கோரி இந்து மக்கள் கட்சியினர், மாட்டு சாணத்தைக் கரைத்து தலையில் ஊற்றி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் சென்னை சாஸ்திரி பவன் முன்பு நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரத போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மளிகை அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர்.

மேலும் சத்யராஜ், பாரதிராஜா, கரு.பழனியப்பன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகத்தினர் இதில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x