Published : 09 Aug 2016 03:07 PM
Last Updated : 09 Aug 2016 03:07 PM
சேலத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கிக்கு சேர வேண்டிய 23 டன் எடை கொண்ட, ரூ.342 கோடி பணம் 228 பெட்டிகளில் வைக்கப்பட்டு,சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன.
சென்னை வந்தடைந்த பிறகு, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பணத்தை எடுக்கும்போது ரயிலின் மேற்கூரையைத் துளையிட்டும், பூட்டை உடைத்தும் பணத்தை கொள்ளை அடித்தது தெரியவந்தது.
யார் எப்படி கொள்ளையடித்தனர் என்பது இன்னும் கண்டுபிடிக்கவில்லை. பணம் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போலீஸில் புகார் செய்துள்ளனர்.
கொள்ளை நடந்த ரயில் பெட்டியில் தடயவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT