Published : 01 Jun 2017 08:32 AM
Last Updated : 01 Jun 2017 08:32 AM

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர் மர்ம மரணம் உறவினர்கள் மறியல்

மென் பொறியாளர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து செங்கல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா தளவாழப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளைய ராஜா (30). இவர் செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி யில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணி யாற்றி வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வழக் கம் போல் பணிக்கு வந்த வர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. நேற்று காலை கழிவறையில் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மர்மச்சாவு என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் நேற்று காலை பிரேத பரிசோதனை நடந்தது. அப்போது பிணவறை முன் உறவினர்கள் கூடியிருந்தனர். பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உடலை வாங்க அவர்கள் மறுத்தனர். சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு காரண மானவர்களை கைது செய்யக்கோரி சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடலை பெற்றுக் கொண்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x