Published : 19 Apr 2017 08:11 AM
Last Updated : 19 Apr 2017 08:11 AM
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1.30 கோடி மோசடி செய்ததாக தனியார் பேருந்து நடத்துநரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன்(34). தனியார் பேருந்தில் நடத்துநராக பணிபுரிகிறார். இவர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக ஆத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமார், எஸ்பி ராஜனிடம் புகார் செய்தார்.
இதுகுறித்து சதீஷ்குமார் கூறிய தாவது: கடந்த 2015-ம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் பணிக்கு நேர்முகத் தேர்வுக்கு சென்றிருந்தேன். அப்போது கணேசனும் வந்திருந்தார். அவர் தனக்கு அமைச்சர்கள், அதிகாரி கள் பலரைத் தெரியும் என்றும் பணம் கொடுத்தால் வேலை வாங் கித் தருவதாகவும் கூறினார். அதை நம்பி ரூ.6 லட்சம் கொடுத்தேன். ஆனால், அவர் வேலை வாங் கித் தரவில்லை. பணத்தை கேட்ட போது ஆட்களை வைத்து மிரட்டி னார். இவ்வாறு அவர் கூறினார்.
சதீஷ்குமார், வாழப்பாடியைச் சேர்ந்த பாலாஜி, சங்ககிரியை சேர்ந்த நடேசன் உள்ளிட்ட பலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்பி ராஜன் உத்தரவின்பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமை யிலான போலீஸார் கணேசனை நேற்று கைது செய்து விசாரித்தனர்.
விசாரணை குறித்து போலீ ஸார் கூறும்போது, “அரசு போக்கு வரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப உதவி யாளர் உள்ளிட்ட பணிகளை வாங்கி தருவதாகக் கூறி கணேசன் மாவட்டம் முழுவதும் பலரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. கணேசனிடம் மேலும் பலர் பணம் கொடுத்திருக்கலாம் என்றும் தெரிகிறது. விசாரணை முடிவுக்குப் பின்னரே முழு விவரம் தெரியும்” என்றனர்.
மோசடி பணத்தில் பேருந்து
கணேசனிடம் பணம் கொடுத்து ஏமாந்த நடேசன் உள்ளிட்ட சிலர் கூறும்போது, “கணேசன் எங்களிடம் வாங்கிய பணத்தில் சொகுசு பேருந்து வாங்கி சேலம்- தம்மம்பட்டி வழித்தடத்தில் இயக்கி வருகிறார். மேலும் மோசடி பணத்தை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரிடம் கொடுத்து வைத்திருக்கிறார். அவர்களை கைது செய்தால், கணேசன் எத்தனை பேரிடம் எவ்வளவு தொகை மோசடி செய் துள்ளார் என்ற விவரம் தெரிய வரும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT