Published : 07 Jun 2016 10:17 AM
Last Updated : 07 Jun 2016 10:17 AM
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. எனினும், எங்கள் அணியில் உள்ள 6 கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசித்து, உரிய முடிவு எடுப்போம்.
தமிழகத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணக்கமாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுக - பாஜக கட்சிகளிடையே அரசியல் உறவு ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளது குறித்து, கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
நான் போட்டியிட்ட காட்டுமன் னார் கோவில் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின்போது ஆளுங் கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்துகொண்டனர் என்பதை மக்களே உணர்ந்துள்ளனர். எனவே, அங்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளேன்.
தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை செய்ய வேண் டும். வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்க வேண்டும். அல்லது 50 சதவீத தொகையை தேர்தல் ஆணையம் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக் கைகளால்தான் தேர்தலை நியாய மாக நடத்த முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT