Published : 22 Feb 2017 09:44 AM
Last Updated : 22 Feb 2017 09:44 AM

வழக்குகளை ரத்து செய்ய கோரிய சசிகலா புஷ்பா மனு தள்ளுபடி

வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சசிகலா புஷ்பா எம்பி தாக் கல் செய்த மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி செய் யப்பட்டன.

அதிமுகவில் இருந்து நீக்கப் பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் பணிபுரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகிய இரு பணிப் பெண்கள் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி புதுக் கோட்டை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய் தனர்.

முன்ஜாமீன்

இதற்கிடையே இந்த வழக்கில் பானுமதி, ஜான்சிராணி ஆகியோ ருக்கு உதவி செய்த திசையன் விளை வழக்கறிஞர் சுகந்தி ஜெய் சன் வீடு மீது கடந்த ஆண்டு செப். 11-ம் தேதி தாக்குதல் நடத் தப்பட்டது. இந்த சம்பவம் தொடர் பாக திசையன்விளை போலீஸார் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் மற்றும் நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரி, ராமலிங்கம், சித்ராகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ் வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் முன்ஜாமீன் பெற்றனர். இந்நிலையில், இவ்விரு வழக்கு களையும் ரத்து செய்யக் கோரி சசிகலா புஷ்பா தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தனர்.

அரசுத் தரப்பில் பதில் மனு

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சசி கலா புஷ்பா மீதான இரு வழக்கு களையும் ரத்து செய்யக் கூடாது. அவர் விசாரணைக்கு ஒத்துழைக் காமல் இருந்து வருகிறார் என அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்விரு மனுக் கள் நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா புஷ்பா தரப்பில் மூத்த வழக்கறி ஞர் வாதிடுவதற்கு வசதியாக விசாரணையை தள்ளிவைக்கு மாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக நீதிபதி கூறினார். இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக சசிகலா புஷ்பா தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x