Last Updated : 08 May, 2017 09:43 AM

 

Published : 08 May 2017 09:43 AM
Last Updated : 08 May 2017 09:43 AM

களைகட்டிய பிரம்மோற்சவ திருவிழாக்கள்: திருவள்ளூர், குன்றத்தூரில் தேரோட்டம் - வேதகிரீஸ்வரர் தந்தத்தொட்டி உற்சவம்

காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டம் நடைப்பெற்ற பிரம்மோற்சவ திருவிழாக்களில் தேரோட்டம் உள்ளிட்ட உற்சவம் நடைப்பெற்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த மாதம் 30-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 8-ம் நாளான நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தந்தத்தொட்டியில் எழுந்தருளி உற்சவர் வேதகிரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வரும் 9-ம் தேதி காலை 11 மணிக்கு வேதகிரீஸ்வரர் சங்கு தீர்த்த குளம் மற்றும் ரிஷப தீர்த்த குளத்தில் இறங்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதேபோல், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று மோகினி அவதாரத் தில் உற்சவர் ஸ்தலசயன பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

திருவள்ளூர்

108 வைணவ திருத்தலங்களில் ஒன் றாக விளங்கும் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் நேற்று திருத்தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. அஹோபில மடத்தின் 46-வது ஜீயர் மத் அழகிய சிங்கர் சுவாமிகள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். மாலைவேளையில் பத்தி உலாவும், இரவு 7 மணியளவில் திருமஞ்சனமும் நடைபெற்றன.

குன்றத்தூர்

குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேசுவர சாமி கோவில் அமைந்துள்ளது. நவ கிரகங்களில் ராகு ஸ்தலமான இந்த கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று மகா தேர் உற்சவம் நடைபெற்றது.

இதில் காலையில் சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டு 6 மணிக்கு அலங் கரிக்கப்பட்ட தேர், தேரடியில் இருந்து புறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்ற திருத்தேர் திருவிழா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x