Published : 07 Sep 2016 09:19 AM
Last Updated : 07 Sep 2016 09:19 AM
சவுதி அரேபியாவில் கடந்த 6 மாதங்களாக கொத்தடிமையாக தவிக்கும் 62 மீனவர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 62 பேர் சவுதி அரேபி யாவில் கொத்தடிமைகளாக உள்ளனர். அவர்களை மீட்கக் கோரி 62 மீனவர்களில் ஒருவரான சேதுராஜாவின் உறவினர் திரு முருகன் உயர் நீதிமன்ற கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
தூதரக அளவில் முயற்சி
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில், மீனவர்கள் 62 பேரும் வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றனர். சவுதி அரேபிய நாட்டு சட்டத்தின்படி அவர்களை வேலைக்கு அமர்த்தி யவர் அனுமதித்தால் மட்டுமே மீனவர்களை இந்தியா அழைத்து வர முடியும்.
இது தொடர்பாக தூதரக அளவில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மீனவர் களுக்குத் தேவையான உதவி களும் வழங்கப்பட்டு வருகின் றன. மீனவர்களை மீட்க அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப் போது மத்திய அரசு வழக்கறிஞர் மேலும் 4 வார காலம் அவகாசம் கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘வெளி நாட்டில் இந்திய மீனவர்கள் கடந்த 6 மாதங்களாக தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு மேலும் அவகாசம் கேட்பது சரியல்ல” என்றனர்.
பதில் மனு செய்யாதது ஏன்?
தொடர்ந்து, ‘‘இந்த விவகாரத் தில் தமிழக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன்? மீனவர்களை மீட்க மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதா” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், இது தொடர்பாக தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT