Published : 07 Jan 2017 09:32 AM
Last Updated : 07 Jan 2017 09:32 AM

விழுப்புரம் அருகே மின் கம்பத்தில் கட்டிவைத்து இளைஞருக்கு தீவைப்பு: வாக்குமூலத்தில் தகவல்

விழுப்புரம் அருகே தீயில் கருகிய இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தன்னை மின் கம்பத்தில் கட்டி வைத்து தீ வைத்து எரித்ததாக நீதிபதியிடம் வாக்குமூலம் அளித் துள்ளார்.

விழுப்புரம் அருகே பெரிய பாபுசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்(24), கூலித்தொழிலாளி. இவர், கடந்த 4-ம் தேதி அதே பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றார். சிறிது நேரத்தில் தீக்காயங்களுடன் ஓடி வந்த அவர் சாலையிலேயே மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து சதீஷின் தாயார் லட்சுமி, கண்டமங்கலம் போலீ ஸில் புகார் அளித்தார். அதில், “ராசபுத்திரபாளையம் கிராமத் தைச் சேர்ந்த இளைஞர்கள் எங்கள் பகுதி வழியாக வந்தபோது எங்கள் பகுதி இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஏரிக் கரைக்கு சென்ற சதீஷை, இருவர் தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பி விட்டனர்” என கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சதீஷிடம் புதுச்சேரி குற்ற வியல் நீதித்துறை நடுவர் தயா ளன் வாக்குமூலம் பெற்றார். அதில் “யாரோ 2 பேர் தன்னை மின் கம்பத்தில் கட்டிவைத்து கொளுத் தினர்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் கண்டமங்கலம் போலீஸார் சதீஷிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து தடய வியல் நிபுணர் சண்முகம், தீக் காயமடைந்த சதீஷ் மற்றும் சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிட்டு, மின்சாரம் தாக்கியதால்தான் அவர் தீக்காயம் அடைந்துள்ளார் எனவும், அதற்கான அறிகுறிகள்தான் உள்ளன எனவும் அரசுக்கு தெரிவித்துள்ளார். அதன்பேரில் கண்டமங்கலம் போலீஸார், தற்கொலை முயற்சி என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் இருதரப்பு மோதலில் இளைஞர் தீவைத்துக் கொளுத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x