Published : 06 Mar 2017 08:41 AM
Last Updated : 06 Mar 2017 08:41 AM

கூடுதல் போலீஸ் டிஜிபி சஞ்சீவ் குமார் காலமானார்

தமிழக கூடுதல் டிஜிபி சஞ்சீவ் குமார் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். 1962-ல் பிறந்த இவர் 1986-ல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். 1991-ல் ஏஎஸ்பியாக திண்டுக்கல் சரகத்தில் பணியாற்றினார்.

இதைத்தொடர்ந்து தமிழக காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்த அவர் கடைசியாக தலைமையிடத்து கூடுதல் டிஜிபியாக பணியில் இருந்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த சஞ்சீவ் குமார் நேற்று கீழ்ப்பாக்கத் தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் காலமானார். அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

2002-ல் தமிழக காவல்துறை விருதையும், 2011-ல் குடியரசு தலைவர் விருதையும் இவர் வென்றுள்ளார். பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று மதியம் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. சஞ்சீவ் குமார் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x