Published : 25 Mar 2014 12:09 PM
Last Updated : 25 Mar 2014 12:09 PM
நீதிமன்றக் கோடை விடுமுறைக்கு முன்பாக தங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புழல் சிறையில் 200-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.சென்னை புழல் சிறையில் 800-க்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் உள்ளனர். அவர்களில் சுமார் 200 பேர் திங்கள்கிழமை காலை உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் கூறியதாவது:
நாங்கள் எப்போதோ செய்த குற்றத்தை வைத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் எங்களை கைது செய்து, பொய் வழக்கு போட்டு போலீஸார் எங்களை சிறையில் அடைத்துள்ளனர். வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை.
இன்னும் சில நாட்களில் நீதிமன்றங் களுக்கு கோடை விடுமுறை வந்துவிடும். அதனால் 2 மாதங்களுக்கு பின்னர்தான் வழக்கு எடுத்துக்கொள்வார்கள். அதற்கு முன்பாக எங்கள் மீதுள்ள வழக்குகளை விசாரித்து எங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கைதிகள் கூறினர்.
உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தால், சிறையில் திங்கள்கிழமை காலையில் கொடுக்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிடவில்லை. சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திய பிறகு, அவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT