Published : 03 Dec 2013 12:08 PM
Last Updated : 03 Dec 2013 12:08 PM

வாக்குக்குப் பணம் வாங்கினால் ஓராண்டு சிறை: ஏற்காடு வாக்காளர்களுக்கு எச்சரிக்கை

ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்கினால் ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என வாக்காளர்களுக்கு தேர்தல ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஏற்காடு தொகுதி வாக்காளர் பெயர் பட்டியலில் செல்போன் எண்ணை பதிவு செய்த வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வாக்காளர் சீட்டு விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் குறுந்தகவலில், 'பணம் வாங்காமல் வாக்களியுங்கள். உங்கள் எதிர்காலத்தை விற்காதீர்கள்' என்ற விழிப்புணர்வு வாசகமும் இடம்பெற்றுள்ளது.

இந்த விழிப்புணர்வு தொடர்பான சுவரொட்டிகள் வாக்குச்சாவடி முன்பும், பொது இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

அத்துடன், 'பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும். வாக்குகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஓராண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும்' என்பதை சுட்டிகாட்டும் விதமாகவும் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x