Published : 05 Dec 2013 05:52 PM
Last Updated : 05 Dec 2013 05:52 PM

மார்ச் 3-ல் ப்ளஸ் டூ, 26-ல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுக்கான தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.

அதன்படி, ப்ளஸ் டூ பொதுத் தேர்வுகள், மார்ச் 3 தொடங்கி மார்ச் 25 வரை நடைபெறும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளஸ் டூ தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் நடைபெறும்.

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை

மார்ச் 26: தமிழ் முதல் தாள்

மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்

ஏப்ரல் 1: ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 2: ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 4: கணக்கு

ஏப்ரல் 7: அறிவியல்

ஏப்ரல் 9: சமூக அறிவியல்

ப்ளஸ் டூ தேர்வு அட்டவணை

மார்ச் 3: தமிழ் முதல் தாள்

மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்

மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 7: ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 10: இயற்பியல், பொருளியல்

மார்ச் 13: வணிகவியல், புவியியல், மனையியல்

மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்

மார்ச் 17: வேதியியல், கணக்குப் பதிவியல்

மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்

மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல்

மார்ச் 25: கணினி அறிவியல், உயிரி வேதியியல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x