Published : 22 Jul 2016 07:39 AM
Last Updated : 22 Jul 2016 07:39 AM

மாயாவதியை விமர்சித்த பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாநிதி, கி.வீரமணி கோரிக்கை

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியை அம் மா நில பாஜக துணைத் தலைவர் தயாசங்கர் சிங் தரக்குறைவான வார்த் தைகளால் விமர்சித்துள் ளார். தயாசங்கர் சிங்கின் இழிவான பேச்சுக்கு நாடாளு மன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வருத்தம் தெரிவித்துள் ளார். இது மட்டும் போதாது. தயாசங்கர் சிங் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநில மான குஜராத்தில் இறந்த பசுமாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த தலித் சமூகத்தினரை ஒரு கும்பல் தாக் கியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கவேண்டும். அரசு அலுவலகமான தபால் நிலையங் களில் கங்கை நீர் விற்பனை செய்வதை நான் கண்டனம் செய் திருந்தேன். இதற்காக இந்து அமைப்பினர் எனது வீட்டுக்கு கங்கை நீரை பார்சலில் அனுப் புவதாக கூறியுள்ளனர். அவர் கள் கங்கை நீரை விற்கட்டும். இந்துத்துவாவை பரப்பட்டும். இவை எல்லாவற்றுக்கும் பாஜக தலைமை இறுதியாக என்ன முடிவு எடுக்கப் போகிறது என பார்ப்போம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாயா வதியை பாஜக நிர்வாகி தயாசங்கர் சிங் என்பவர் தரக்குறைவாக விமர்சித் துள்ளார். எதிர்க்கட்சியினராக இருந்தாலும் கொள்கை ரீதியாக அவர்களை விமர்சிக்கலாமே தவிர, தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது. எனவே, தயாசங்கர் சிங் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்.

குஜராத்தில் இறந்த பசு மாட்டின் தோலை உரித்ததாக தலித்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் வரும் 29-ம் தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’ என்று கூறியுள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x