Published : 04 Dec 2013 01:45 PM
Last Updated : 04 Dec 2013 01:45 PM

தமிழக மீனவர்கள் 20 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 20 பேரின் காவலை டிசம்பர் 17-ம் தேதி வரை நீட்டித்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த நவம்பர் 20 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டை பட்டினம் பகுதியை சேர்ந்த ஆனந்த், குமரேசன், குரளரசன, முத்தையா ஆனந்த் உள்ளிட்ட 20 மீனவர்களையும் கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில் தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 20 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு 5 விசைப் படகுகளையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட மீனவர்ககள் பின்னர் 20 பேரையும் இலங்கை காங்கேசன் துறைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

பின்னர் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் மீனவர்களை நவம்பர் 21ம் தேதி மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த நீதிபதி மீனவர்களை டிசம்பர் 4 வரை காவலில் அடைக்க உத்திரவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் காவல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீண்டும் நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்கள் 20 பேரையும் டிசம்பர் 17ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 20 பேரும் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x