Published : 03 Jun 2016 08:01 AM
Last Updated : 03 Jun 2016 08:01 AM

ஆஸ்திரேலியா செல்ல இருந்த இலங்கை அகதிகள் 33 பேர் சிக்கினர்

பொன்னேரி அருகே உள்ள பழ வேற்காடு முகத்துவாரம் வழியாக படகு மூலம் இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா செல்ல முயல்வதாக க்யூ பிரிவு போலீ ஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலாச்சியம் மன் குளம் சோதனை சாவடி அருகே வந்த வேன்களை போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனை செய்ததில், அவற்றில் இருந்த 18இலங்கை அகதிகளும், ஜனப்பன்சத்திரம் ஜி.என்.டி. சாலையில் நேற்று நடைபெற்ற சோதனையில் சிக்கியபவானி சாகர் அகதிகள் முகாமைச் சேர்ந்த 10 இலங்கை அகதிகளும் பழவேற்காடு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றது தெரியவந்தது.

ஆஸ்திரேலியா செல்வதற்காக பழவேற்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் தலா 1.50 லட் சம் ரூபாய் பணம் கொடுத்திருந் ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், 13 அகதிகள் மற்றும் 6 வேன் ஓட்டுநர்கள் என 9 பேரை கைது செய்தனர். சுரேஷ், சங்கர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதேபோன்று, கல்பாக்கம் கடலோரப் பகுதியில் கடலோர காவல்படை போலீஸார் சோதனை நடத்தியதில் கல்பாக்கம் அடுத்த பெருமாள் சேரி பகுதியில் ராஜா என்பவர் சிவா மற்றும் செல்வம் ஆகிய 2 முகவர்களிடம் தலா ரூ.1 லட்சம் வரை பணம் கொடுத்து படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல இருந்தது தெரியவந்தது.

அவர்களை பிடித்து கல்பாக்கம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x