Published : 22 Nov 2014 12:09 PM
Last Updated : 22 Nov 2014 12:09 PM
தஞ்சையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மதிமுக செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். மேலும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை, திருவாரூர், நாகையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், 3 மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதனை கண்டித்து மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் இன்று (சனிக்கிழமை) காலை தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து வைகோ உள்பட 3000 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT