Published : 11 Aug 2016 08:48 AM
Last Updated : 11 Aug 2016 08:48 AM

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2,537 கோடிக்கு திருமண நிதி

சட்டப்பேரவையில் சமூகம் நலம், சத்துணவுத் திட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை அளித்து அமைச்சர் வி.சரோஜா பேசியதாவது:

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ், கடந்த 5 ஆண்டுகளில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 643 பெண்கள் பயன் பெற்றுள்ளனர். இதில் 4 கிராம் தங்க நாணயத்துடன் நிதி உதவியாக 3 ஆயிரத்து 324 கோடியே 38 லட்சம் ரூபாயும், திருமாங்கல்யம் செய்வதற்காக ரூ.786 கோடியே 64 லட்சம் செலவில் 2 ஆயிரத்து 843.50 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. இத் திருமணங்களுக்கான நிதி உதவியாக மட்டுமே ரூபாய் 2 ஆயிரத்து 537 கோடியே 74 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும், குழந்தைத் திருமண தடைச் சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 564 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x