Published : 01 Jun 2016 08:54 AM
Last Updated : 01 Jun 2016 08:54 AM

தேர்தல் தோல்வி குறித்து தமாகா நிர்வாகிகளுடன் வாசன் 4 நாள் ஆலோசனை

தேர்தல் தோல்வி குறித்து தமாகா மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுடன் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 4 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து 26 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. இதனால் தமாகாவினர் உற்சாகம் இழந்துள்ளனர். இந்நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வரும் 3-ம் தேதி மாநில நிர்வாகிகள், 4-ம் தேதி மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து 6-ம் தேதி மாநிலச் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், கொள்கை பரப்புச் செயலாளர்கள் கூட்டமும், 11-ம் தேதி மாநில செயற்குழு கூட்டமும் நடைபெற உள்ளதாக வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்சியின் வளர்ச்சி, தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகளுடன் விவாதிக்க இருக்கிறோம். அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவோம்.

இந்தக் கூட்டங்கள் முடிந்த பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க இருக்கிறேன். தமிழக மக்களின் நலனுக்காக தமாகா தனது பணியைத் தொடரும்’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x