Published : 19 Feb 2017 08:52 AM
Last Updated : 19 Feb 2017 08:52 AM

தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தற்போது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.25-ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று அவரைக்காய் விலை ரூ.15-லிருந்து ரூ.30 ஆகவும், புடலங்காய் விலை ரூ.20-லிருந்து ரூ.40 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் முருங்கைக்காய் விலை ரூ.40-லிருந்து ரூ.15 ஆகவும், பீன்ஸ் ரூ.35-லிருந்து ரூ.30 ஆகவும் குறைந்துள்ளது.

கோயம்பேடு வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் சுகுமார் கூறும்போது, “வார்தா புயலால் பல தக்காளி செடிகள் அழிந்ததன் காரண மாக தக்காளி உற் பத்தி குறைந்ததுடன், சந்தைக்கு வரத்தும் குறைந்துள்ளது.

அதனால் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. அடுத்த 15 நாட்களுக்கு வறட்சி காரணமாக காய்கறி விலை மேலும் உயரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x