Published : 07 Apr 2017 11:59 AM
Last Updated : 07 Apr 2017 11:59 AM
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன் திரண்ட தளவாய் சுந்தரம் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை நடைபெறுவதால் அவர் வீட்டின் வாயில் கதவு பூட்டப்பட்டு அங்கு 4 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன் திரண்ட தளவாய் சுந்தரம் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம், இந்த வருமானவரி சோதனையில் உள்நோக்கம் இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், வீட்டுக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
உதவியாளர் வீட்டில் பணம் பறிமுதல்:
இதற்கிடையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் நயினார் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.2.5 கோடி பணம் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT